பல்கலைக்கழக மாணவர்கள் 31 பேருக்கு கோவிட் தொற்று.
யாழ் .பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் 31 மாணவர்களிற்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா ,பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் இன்றைய தினம் சுகாதார பிரிவினரால் அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகளின் பிரகாரம் 31 பேருக்கு தொற்று இருப்பது உறுது செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தென்பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ,குறித்த மாணவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதுவரையில், வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
Today's Exclusive News Tamil


No comments:
Post a Comment