பொலிஸாரின் காவலில் இருந்த இரண்டு கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை அளிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்தவாரம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலக குழுவைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் அளிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.


No comments:
Post a Comment