சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் பின்பற்றுகின்றனார்கள் என பொலிஸாரினால் கண்காணிக்கப்படவுள்ளது.
இக்கண்காணிப்பு நடவடிக்கையானது இன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட பொலிஸ் குழுக்களானது நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் .
அனைத்து நேரங்களிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற தவறிய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் கொரோனா வைரஷின் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பல தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment