கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு
தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு 1,200 ரூபாவிலிருந்து 900 ரூபாவாக ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதுவே முதல்வர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு 800 ரூபாவிலிருந்து 550 ரூபாவிலிருந்து ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு 600 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகக் குறைக்கப்படுகிறது.
வீட்டிற்குச் சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக 300 ரூபா வசூலித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
Today's Exclusive News Tamil


No comments:
Post a Comment