பதுளை - வெலிமடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் தொற்றியுள்ளது.
இதனையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தை இன்று முதல் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்ததாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் வசித்து வரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், வெலிமடையில் வசிக்கும் பிரதான எழுதுவினைஞரான பெண் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேருக்கே கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
இவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment