எண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்? அதில் உள்ள ஆபத்தை தெரிஞ்சிகோங்க - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

எண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்? அதில் உள்ள ஆபத்தை தெரிஞ்சிகோங்க

Share This

 வடை, பஜ்ஜி போன்ற பொரித்த உணவில்  உள்ள எண்ணெயை வெளியேற்ற பல கடைகளில் செய்தித்தாள்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 

சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள்.

அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை.

பலரும் வடை, பஜ்ஜி போன்றவற்றில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து.

காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும்.

காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும்.

இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு.

அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages