சுற்றாடலை மாசுபடுத்தும் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் வகையில் விசேட அவசர தொலைபேசி இலக்கமொன்றை ஸ்ரீலங்கா பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கம் 1997 என்பதாகும்.
குப்பை கூழங்களை பாதையின் ஓரங்களில் வீசி எறிதல், காடுகளை அழித்தல், மரம் வெட்டுதல், அதிகூடிய காபனீர் ஒக்சைட் துகளை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுதல், ஒலி மற்றும் சத்தங்களை பெரிதாக ஒலிக்கச்செய்தல் உட்பட அனைத்து சுற்றாடல் மாசடைதல் தொடர்பான முறைப்பாடுகளையும் இந்த அவசர இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கலாம்.

No comments:
Post a Comment