கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதை அடுத்து நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையில் எந்தவித மாற்றமும் கிடையாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு 25ம் திகதி இரவு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment