பயணத்தடை விதிப்புக்களினால் ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகளுக்கு தடையில்லை என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை திங்கள் கிழமை அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் உள்ளநிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment