கோவிட் பரவலைக்கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக நேற்று இரவு முதல் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் கோவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல வல்லுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment