நாட்டில் 14 நாட்களுக்கு கடுமையான நடமாடத் தடை விதிக்கப்பட வேண்டும் என கொழும்பு மருத்துவ பீடத்தின் சமூக வைத்திய திணைக்களத்தின் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுதல் வேண்டும்.
இது தொடர்பில் வைத்திய நிபுணர்கள் அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment