நாடாளவிய இன்று முதல் மின்விநியோக தடை ஏற்படாது..!
இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மின் பிறப்பாக்கிகளில் இருந்தும் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனூடாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோல்ட் மின் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருத்த பணிகளுக்காக நாளை அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Todays Exclusive News Tamil

No comments:
Post a Comment